அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் – உயர்கல்வி அமைச்சர் பேட்டி – TN Semester Exam Update

செமஸ்டர் தேர்வு: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். கொரோனா தொற்று பரவல் கருத்தில் கொண்டு மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரே மாதிரியான முறையில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும் என அவர் கூறினார்.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை பல்கலைக்கழகங்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். தேர்வுகள் மற்றும் நேரடி முறையில் நடத்தப்படும் என அவர் கூறினார்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

READ ALSO : செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்த வேண்டும் – கல்வி மேம்பாட்டு குழு

செமஸ்டத் தேர்வு:

அமைச்சர் பொன்முடி கூறியதாவது, குளறுபடிகள் ஏதும் நடக்காதபடி, ஒழுங்காக நேர்மையாக அதே நேரத்தில், தேர்வு எழுதுபவர்களும் தவறுகள் செய்யாதவாறு, அதையும் கண்காணிக்கும் வகையில் இந்த தேர்வுகள் நடத்தப்படும்.

மேலும் அவர் கூறியதாவது, கொரோனா பரவல் இருந்தால் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும், கொரோனா பரவல் இல்லையென்றால் வழக்கமான நடைமுறையில் தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னதாக, கல்வி அமைப்புகள் காலதாமதம் செய்யாமல், தேர்வுகள் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆன்லைன் தேர்வுக்கு சில ஆசிரியர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Related Articles

Latest Posts