TN School Summer Holiday | தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை
TN School Summer Holiday
தமிழகத்தில் 1-9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை ஏப்ரல் (29) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டில் (2022-23) பள்ளிகள் சற்று தாமதமாக கடந்த ஜூன் 13இல் திறக்கப்பட்டன. எனினும், பிளஸ்1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி ஏப்ரல் மாதத்திற்குள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன.
Read Also: பள்ளி மாணவர்களுக்கு தபால் கார்டில் ரிசல்ட்
தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாக ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிைடயே, நடப்பாண்டு அனைத்து வகை பள்ளிகளுக்குமான வேலை நாள் வெள்ளிகிழமையுடன் (ஏப்ரல் 28ம் தேதி) நிறைவு பெறுகிறது. இறுதிநாளில் எஞ்சியுள்ள தேர்வு மட்டும் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது.