You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ரூ.1000 உதவித்தொகை|PENKALVI SCHOLORSHIP Apply Online| https://penkalvi.tn.gov.in

Moovalur Ramamirtham Ammaiyar Scheme|Moovalur Ramamirtham Ammaiyar Scheme

ரூ.1000 உதவித்தொகை | PENKALVI SCHOLORSHIP Apply Online | https://penkalvi.tn.gov.in

Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme |https://penkalvi.tn.gov.in | Penkalvi Scholorship | Rs 1000 scholarship for college students | Tamil Nadu Higher Education department | Higher Education Minister Ponmudi | financial assistance of Rs. 1000/month |

உயர்கல்வித்துறை - மாணவியர்களுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம் – மாணவியர் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்தல் – வழங்குது தொடர்பாக.

ரூ.1000 உதவித்தொகை penkalvi
ரூ.1000 உதவித்தொகை penkalvi
தொழில்நுட்ப கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை (Undergraduate) பயிலும் மாணவிகளுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம் என்ற திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு கீழ்கண்ட வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.

READ ALSO THIS: Moovalur Ramamirtham Scheme 2022 | பல்வேறு சிக்கலால் விண்ணப்பிக்க முடியாமல் திணறும் கல்லூரி மாணவிகள்

https://penkalvi.tn.gov.in

தற்போது, இத்திட்டத்தினை செயல்படுத்த ஏதுவாக https://penkalvi.tn.gov.in என்ற முகவரியில் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

மேற்காண் இணையதளத்தில், இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை 25.06.2022 முதல் 10.07.2022க்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில் பதிவிடப்பட வேண்டும்.

IMPORTANT: உங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால் உடனடியாக கல்லூரி கல்வி இணை இயக்குனர் மூலம் உயர் கல்வித்துறைக்கு தெரிவிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தகுதியானர்வர்கள் யார்?

அரசு பள்ளிகளில் (Governement Schools, Corporation Schools, Municipal Schools, Panchayat Union School, Adi Dravidar and Tribal Welfare Schools, Kallar Reclamation Schools, Forest Department School and other schools managed by government departments), 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியை தொடரும் மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.

என்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்

இத்திட்டத்தினை இளநிலை பயிலும் மாணவியரிடம் இருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் கோரப்படுகின்றன.

மாணவியர் கீழ்கண்ட ஆவணநகல்களை கொண்டு வர வேண்டும்

  1. ஆதார் நகல்,
  2. வங்கி கணக்கு புத்தக நகல்,
  3. பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்,
  4. பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்
விவரங்கள் சார்ந்த மாணவியர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் மூலம் உள்ளீடு செய்யப்பட வேண்டும். சரியான விவரங்கள் உள்ளீடு செய்யப்படுவதை சார்ந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவியர் பதிந்திடும் தங்களின் அலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும் என்பதால், அலைபேசியை தவறாது கொண்டு வர வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்க்கு தகவல் அளித்து கல்லூரிக்கு வரவழைத்து தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடிந்த பிறகு (முற்பகல் அல்லது பிற்பகல்) இந்த விவரங்களை விரைந்து உள்ளீடு செய்தல் வேண்டும். இணையதள வசதி உள்ள மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாக மேற்காண் இணைய முகவரியை பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இதனை சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தினை தொழில்நுட்ப கல்வி ஆணையர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர், அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரி வாரியாக கண்காணித்து உடனுக்குடன் விவரங்கள் பதவிடப்படுவதை உறுதி செய்து அனைத்து மாணவியர் விவரங்களும் 30.06.2022க்குள் பதவிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவியரின் எண்ணிக்கை குறித்த அறிக்கை தவறாது அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, உயர் கல்வித்துறை செயலாளர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.  

PENKALVI SCHOLORSHIP PDF - DOWNLOAD HERE

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சோ்க்கைக்கான அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளில் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் கீழ் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு/பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு/தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரைக்கும், மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்த திட்டத்தில் கூடுதலாக பெறலாம்.

திட்டத்தின் நோக்கம்

  • பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல்
  • குழந்தை திருமணத்தை தடுத்தல்
  • குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்
  • பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்
  • உயர் கல்வியினால் பெண்களின் திறமைமைய ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல்
  • உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்
  • பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல்
  • இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல்

திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்

மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ம் ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வராக இருக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர், சீர்மரபினப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலப்பள்ளிகள், சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

மாணவிகள் 8 (அ) 10 (அ),12ம் வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். (சான்றிதழ் Certificate course), பட்டயம் (Diploma/IT, D.Ted,,Courses) இளங்கலை பட்டம் (Bachelors’ Degree) (B.A, B.Sc, B.Com, BBA, BCA and All Arts and Science, Fine Arts Course) தொழில் சார்ந்த படிப்பு (B.E, B.Tech, MBBS, B.D.S, B,Sc (agri), B.V.Sc, B.Fsc, B.L etc) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy, etc போன்றவை)

தொலைத்தூர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

2022-2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும்,

தொழிற்கல்வியை பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவ கல்வியை பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து  ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

2021-2022ஆம் ஆண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலை படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள்.

இத்திட்டத்தன் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயன் அடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது.

Penkalvi Helpline Number 14417

இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்த தங்களுக்கு தேவையான தெளிவுரைகள் / கூடுதல் விவரங்கள் கட்டணமில்லா தொைலபேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும் இளங்கலை / தொழிற்கல்வி / மருத்து கல்வியில் இரண்டாம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்ட https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.