You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Tirunelveli CEO Court Problem | திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் பிடிவாரண்ட்

Typing exam apply Tamil 2023

Tirunelveli CEO Court Problem | திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் பிடிவாரண்ட்

Tirunelveli CEO Court Problem

நீதிமன்றம் உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்கலின் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, பி.ஏ ஆங்கில பிரிவில் பட்டப்படிப்பை கடந்த 2008ஆம் ஆண்டில் முடித்தேன். பின்னர் 20212ஆம் ஆண்டில் பி.எட் படிப்பை முடித்துவிட்டு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கிரேடு –2 ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று உள்ளேன். பதவி உயர்வு பெற எனக்கு தகுதி இருந்தும், அதிகாரிகள் தர மறுக்கின்றனர். இதுதொடர்பாக, 2020ஆம் ஆண்டில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரித்த நீதிமன்றம் எனது மனுவை 8 வாரத்தில் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை எனது பதவி உயர்வுக்கான மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை. எனவே, நீதிமன்றம் உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

Read Also: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதிப்பு

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது நீதிபதி, நீதிமன்றம் உத்தரவை பின்பற்றாத இரண்டு கல்வி அலுவலர்களை நீதிமன்றத்தில் வரும் 20ம் தேதிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.