Read Also: வினாத்தாள் விவகாரம் ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 421 தினக்கூலி பணியாளர்கள் தாங்கள் எந்த நேரமும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, பல்கலைக்கழங்களிலும் பிற அரசு துறைகளிலும் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் பணியாளர் நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.