இந்த செய்தி எஸ்எம்சி கூட்டத்திற்கு டிமிக்கி கொடுத்த தலைமை ஆசிரியர்கள் குறித்து
பள்ளி மேலாண்மை குழு வலுப்படுத்தவும், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பள்ளி கல்வித்துறை மார்ச் 20ம் தேதி பள்ளிகளில் பெற்றோர்களை அழைத்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அழைப்பிதழை வழங்கினார்.
தலைமை ஆசிரியர்கள்
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோட்டையூர் மலைவாழ் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் பள்ளி மேலாண்மை கூட்டத்தில் பங்கேற்க நேற்று பள்ளிக்கு சென்றனர். அப்போது பள்ளி மூடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் நாகேந்திரன் சொந்த பணிக்காக பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்தது தெரியவந்தது. மேலும், அவர் மட்டும் பள்ளியில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பள்ளி மேலாண்மை கூட்டம் அப்பள்ளியில் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
ALSO READ THIS: ரூ. 25 லட்சம் மோசடி – ஆசிரியர் சங்க தலைவா், செயலாளர் திடீர் கைது
தளி வட்டார கல்வி அலுவலரும் இந்த விவகாரம் குறித்து தெரியவில்லை என கூறப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியா் அவர் விடுப்பு குறித்து உயர் அதிகாரிகளிடம் அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன் இதுகுறித்து விசாரித்து வருகிறார். மேலும், பீர்னப்பள்ளி கிராம மக்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் எஸ்எம்சி கூட்டத்திற்கு முன்பு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.பிளிக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் எஸ்எம்சி கூட்டத்தை காலை 10.30 மணிக்குள் நடத்தி முடித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.