அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

ரூ. 25 லட்சம் மோசடி – ஆசிரியர் சங்க தலைவா், செயலாளர் திடீர் கைது

ரூ. 25 லட்சம் மோசடி – ஆசிரியர் சங்க தலைவா், செயலாளர் திடீர் கைது

சேலம் மாவட்டம் கொளத்தூரில் யூனியன் பணியாளா் மற்றும் ஆசிரியர்கள் சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஓமலூர் சரக துணைப்பதிவாளர் சுவேதா மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து வழங்கப்படும் காசோலைகளை திருத்தியும், மேலும் பல வகையிலும் ரூ.25 லட்சம் வரையில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

READ ALSO THIS |பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பின்பற்ற வேண்டிய முக்கியமான நடைமுறைகள்

இதையடுத்து சங்க செயலாளரான நங்கவள்ளியை சேர்ந்த சிட்டி முருகன் (52) என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இந்த மோசடி தொடர்பாக வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் காசோலைகளில் திருத்தம் செய்து ரூ.24.91 லட்சம் மோசடி நடந்திருப்பதும், சங்கத்தின் தலைவர் பிரபு (48) செயலாளர் சிட்டி முருகன் ஆகியோர் இதில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Articles

Latest Posts