You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Village Panchayat secretary Appointment Norm | கிராம ஊராட்சி செயலர் பணி நியமனம் விதி  

Typing exam apply Tamil 2023

Village Panchayat secretary Appointment Norm | கிராம ஊராட்சி செயலர் பணி நியமனம் விதி  

Village Panchayat secretary Appointment Norm

கிராம ஊராட்சி செயலர்களை நியமனம் செய்வதற்கான விதிமுறைகள், பணி வரன்முறைகள் குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த உத்தரவை ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலர் பி செந்தில்குமார் வெளியிட்ட உத்தரவு

கிராாம ஊராட்சி செயலர்களை நியமிக்க போட்டி தேர்வு முறையில் பின்பற்றப்படும். இந்த தேர்வுக்கென மாவட்ட அளவிலான குழு அமைக்கப்படும். இந்த குழுவில், கூடுதல் ஆட்சியர், ஊராட்சி துறை உதவி இயக்குனா், ஆட்சியரின் தனி உதவியாளர் உறுப்பினர்களாக இருப்பர். ஊராட்சி செயலர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கிராம ஊராட்சி கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

கிராம ஊராட்சி செயலர் வயது

ஊராட்சி செயலர்கள் பதவிக்கு வருபவர்களின் வயது 18 நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் ஜூலை 1ம் தேதி நிலவரப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். பிற்படுத்தப்பட்ட, மிகவும், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கான அதிகபட்ச வயது வரம்பு 37.

ஊராட்சி செயலர்கள் பதவிக்கான தேர்வு எழுத விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராம ஊராட்சி செயலர்களை ஒரு கோட்டத்துக்குள்ளே பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் கோட்ட வளர்ச்சி அதிகாரிக்கு உள்ளது.

அதேசமயம், மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்ய ஆட்சியரின் தனி உதவியாளருக்கும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துைற இயக்குனருக்கு அதிகாரம் உள்ளது.

பெண் ஊராட்சி செயலர்கள் கர்ப்பிணியாக இருந்தால், அவர்களுக்கு ஊதியத்துடன் ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படும். ஊராட்சி செயலர் மிமு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கோட்ட வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி செயலரும், அரசு பணியாளரும் இணைந்து ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும்பட்சத்தில் அவர்கள் மீது ஊராட்சி சட்டப்பிரிவு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.