அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.3 C
Tamil Nadu
Monday, December 11, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Valangaiman BEO Arrest | வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் கைது

Valangaiman BEO Arrest | வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் கைது

Valangaiman BEO Arrest

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் உள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள விநாயகர் கற்சிலை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருடு போனது.

இதையடுத்து கோயில் சிலை திருட்டு தொடர்பாக, கரம்பயம் மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், பாப்பாநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமாரவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், குறிச்சி காசி விஸ்வநதாதர் கோயில் அருகே உள்ள மாரியம்மன்கோரில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த ஊரில் ஏற்கனவே அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும், தற்போது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவருமான சி செல்லத்துரை (59) இருசக்கர வாகனத்தில் விநாகயர் கற்சிலையை திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

Read Also: வட்டார கல்வி அலுவலர் மீது வசூல் புகார்

தொடர்ந்து பட்டுக்கோட்டையில் தனது மகளின் வீட்டில் உள்ள செல்லத்துரையை போலீசார் நேற்று கைது செய்து திருடிய சிலையை மீட்டனர். செல்லத்துரை குறிச்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய போது ஊரில் உள்ள சிலருடன் முன் விரோதம் இருந்துள்ளது. ஆத்திரமடைந்த செல்லத்துரை கோயில் சிலையை திருடி சென்றால், அந்த ஊரில் திருவிழா தடைபடும் என்பதால் சிலையை திருடியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Posts