You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

தக்காளி காய்ச்சல் அதிகரிப்பு குழந்தைகள் மீது கவனம் அவசியம்

Tomato fever raise among children in Tamil Nadu

தோலில் சிவப்பு நிற அரிப்புடன் ஏற்படும் தக்காளி காய்ச்சல் பரவ துவங்கியிருப்பதால், எச்சரிக்கை அவசியம் என பொது சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

தக்காளி காய்ச்சல், குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருகிறது. முதலில் தொண்டை வலி ஏற்பட்டு, ஒாிரு நாளில் காய்ச்சலாகவும், பின் கை, கால் பாதங்களில் கொப்புளம் மற்றும் அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மூட்டு வலி, உடல்வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. 

கோடை காலம் துவங்கியிருப்பதால், குழந்தைகள் இத்தகைய உபாதயைால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தொற்றுநோயாக இருப்பதால், வீட்டில் இருக்கும் பெரியவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். 

பொதுசுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது, இந்த காய்ச்சல் சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்போதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள், ஒவ்வொரு முறை நண்பர்களுடன் விளையாடி வீட்டிற்கு வரும்போது, கை, கால்,முகம் கழுவுவது அவசியம். தக்காளி காய்ச்சல் பொறுத்தவரையில், ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகிவிடும். அதேநேரம், பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது அவசியம். 

இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், தொற்று பரவல் அதிகரித்து உடல்ேசார்வை உண்டாக்கும். எனவே, அறிகுறிகள் தெரிந்தால், உடனடி சிகிச்ைச பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது, இவ்வாறு அவர் கூறினார்.