அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

தனித்தேர்வர்களுக்கான தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் – கல்வியாளர் வேண்டுகோள் – Exams for private candidates to cancel by Tamil Nadu government for their higher studies

கல்வி மேம்பாட்டுக்குழு, ஒருங்கிணைப்பாளர், பேரா.க.லெனின்பாரதி, வெளியிட்ட அறிக்கை,

கொரானா பெருந்தொற்று எல்லா துறைகளையும் கடுமையான பாதிப்பிற்கும் சிக்கலுக்கும் உள்ளாக்கி  உள்ளது. கல்வித்துறையும் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மதிப்பெண் வழங்கும் முறையில்  தமிழ்நாடு அரசு பல்வேறு மாறுதல்களை கொண்டுவந்துள்ளது. உள்ளபடியே இது வரவேற்கத்தகுந்த நடவடிக்கை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதன்மூலம் பயனடைந்து உயர்கல்வியை நோக்கி நகரும் சூழ்நிலையை தமிழ்நாடு  அரசின் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

தனது பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலைகளால், புறக்காரணிகளால்  பள்ளியை விட்டு வெளியேறி ஏதாவது வேலைகளுக்கு சென்று சிறிய வருமானம் ஈட்டிக்கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான  மாணவ மாணவிகள் தனது கல்வியை ஏதேனும் ஒரு வகையில் தொடர தனித்தேர்வர்களாக ( private  students ) பதிவு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்று அதில் பலர் மீண்டும் உயர்கல்வியை ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கொண்டிருப்பர். இதுதான் இது வரையிலான நடைமுறை.

ஆனால் இப்பெருந்தொற்று காலத்தில் தனித்தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது என்ற முடிவு தவறானது. பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளே தேர்வை சந்திக்க சிரமப்படும் சூழலில் இவர்களின் நிலை இன்னும் பின்தங்கியதாகவே இருக்கும். கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய தனித்ததேர்வர்களில் 60  சதமானோர் தேர்ச்சி பெறவில்லை.

பொருளாதார குடும்ப சூழ்நிலைமைகள் இவர்களின் கல்வி அடைவுகளில் பெரும்பங்கு வகிக்கின்றன .கொரானா மூன்றாம் அலைக்கான சூழல் அதிகமாக இருப்பதாலும் ,இவர்களின் உயர்கல்வி வாய்ப்பை கருத்தில் கொண்டும் தனித்தேர்வர்களாக பதிவு செய்து தேர்விற்கு காத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் தேர்ச்சியை அறிவித்து, பள்ளிக்கு சென்று பயிலும்  மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணய நடைமுறை செய்தது போல், தனித்தேர்வர்களுக்கும் குறைந்த பட்ச தேர்ச்சிக்கான சராசரி மதிப்பெண் நடைமுறையை உருவாக்கி அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் .

ஒருங்கிணைப்பாளர்
contact no : 8523909178

Related Articles

Latest Posts