அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

tnvelaivaaaippu.gov.in| வேலை வாய்ப்பு பதிவு பள்ளிகளில் அடியோடு நிறுத்தம், ஷாக்…

tnvelaivaaaippu.gov.in| வேலை வாய்ப்பு பதிவு பள்ளிகளில் அடியோடு நிறுத்தம், ஷாக்…

tnvelaivaaaippu.gov.in

வேலைவாய்ப்பு பதிவுகள் இனி பள்ளிகளில் செய்யப்படமாட்டாது என்று வேலை வாய்ப்பு துறை அறிவித்துள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு படித்த முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது, அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்துகொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

READ ALSO THIS: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் சிக்கல்? நீதிமன்றத்தில் திடீர் வழக்கு  

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் ேவலை வாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்பவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaaippu.gov.in என்ற முகவரியில் நேரடியாக பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இ- சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பெற்றோர் மத்தியில் அதிர்ச்சிைய ஏற்படுத்தி உள்ளது. முந்தைய மாணவர்கள் எவ்வித இடையூறு இல்லாமல் தங்களது வேலை வாய்ப்பு பதிவினை அந்த பள்ளிகளில் செய்துகொண்டர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களும் வேலை வாய்ப்பில் பதிவு செய்தனரா என்று உறுதி செய்தனர். தற்போது இது ரத்து செய்யப்பட்டதால், எவ்வித வழிகாட்டுதல் இன்றி, பல பள்ளிகளில் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க முடியாமல் போகும். எனவே, பள்ளிகளில் இதனை தொடர வேண்டும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

Related Articles

Latest Posts