You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNPSC Group 4 Exam Result 2023| குரூப் 4 தோ்வு கட்ஆப் உயர்வு

TNPSC BEO Exam Latest News

TNPSC Group 4 Exam Result 2023| குரூப் 4 தோ்வு கட்ஆப் உயர்வு

TNPSC Group 4 Exam Result 2023

அரசு பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10,117 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது.

Read Also: டிஎன்பிஎஸ்சி வினா விடை கையேடு

பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படை கல்வி தகுதியாக கொண்ட இந்த தேர்வில் 13.86 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக குரூப் 4 தேர்வு முடிவுகள் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும். ஆனால், கடந்த ஆண்டுகளை விட அதிக அளவிலான தேர்வர்கள் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களால் இந்த முறை தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7301ல் இடங்களில் இருந்து 10,117 ஆக உயர்த்தப்பட்டது. இது தேர்வர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, எனினும் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்தது.

அதன்படி சுமார் 8 மாதங்களுக்கு பிறகு, குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்கள் முடிவுகளை http://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். ஒரே நேரத்தில் லட்சகணக்கான தேர்வர்கள் தேர்வு முடிவுகளை அறிய முற்பட்டதால், டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியது. தேர்வர்கள் சிரமம் அடைந்தனர்.

டிஎன்பிஎஸ்சி கட் ஆப் மதிப்பெண்

குரூப் 4 காலி பணியிடங்க் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் கட்ஆப் மதிப்பெண் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால், கட்ஆப் உயர்ந்துள்ளது. மொத்த மதிப்பெண் 300க்கு 170க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களே தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.