You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNPSC Group 2 Latest News | டிஎன்பிஸ்சி குரூப் 2 மறுதேர்வு நடத்த வாய்ப்பில்லை 

TNPSC Latest News

TNPSC Group 2 Latest News | டிஎன்பிஸ்சி குரூப் 2 மறுதேர்வு நடத்த வாய்ப்பில்லை 

TNPSC Group 2 Latest News

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சற்று முன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -2 (தொகுதி-2 & 2A)ன் முதன்மை எழுத்துத் தேர்வு 25.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகல் அன்று 20 மாவட்டத் தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த முதன்மைத் தேர்வு பின்வரும் இரு தாட்களை உள்ளடக்கியது:

  1. தாள் 1 கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தாள் - முற்பகல்
  2. தாள் - 2 - பொது அறிவுத்தாள் - பிற்பகல் (நேர்முகத் தேர்விற்கு/ தெரிவிற்கு தாள் 2ல் பெறப்படும் மதிப்பெண்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்)
வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் காரணமாக காலை தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.

பிற்பகல் தேர்வு நேரம், 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது. அதன்படி பிற்பகல் தேர்வானது துவங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வில் 94.30% தேர்வர்கள் பங்கேற்றனர்.

Read Also: குரூப் 2 தேர்வு ரத்து செய்க

முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வாகுமாகையால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது மற்றும் இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே என்பதுடன் நேர்வாணையத்தின் முன் அனுபவத்தின்படி 98% ற்கும் கூடுதலான தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாட்கள் திருத்தும்போது, கருத்தில் கொள்ளப்படும்.

தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின்படி, பிற்பகல் தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையால், பிற்பகல் தரவரிசைக்கு கருதப்படும் தாள்-II பொது அறிவுத்தாள் தேர்வானது எவ்வித இடையூறுமின்றி அனைத்து தேர்வுமையங்களிலும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த தாள்-IIல் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும், வருகைப்பதிவேட்டிற்கும் இடையிலான வரிசை வேறுபாடே முற்பகல் தேர்வில் காலதாமததிற்கு காரணம். இந்த வேறுபாடு ஏற்பட காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இந்த செய்திக்குறிப்பில் மறு தேர்வு நடத்த  வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாக குறிக்கிறது.