அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
37.3 C
Tamil Nadu
Thursday, June 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

TN Teacher Sexual Harassment | அரசு பள்ளி ஆசிரியர் கைது  

TN Teacher Sexual Harassment | அரசு பள்ளி ஆசிரியர் கைது  

TN Teacher Sexual Harassment

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கீரம்பூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசியராக பணியாற்றி வந்த பன்னீர்செல்வம் என்பவர் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகளை அவர் ஆபாசமாக செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள், தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

Read Also: ஊட்டி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளி முன்பு நேற்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னா், அந்த ஆசிரியரிடம் செல்போன் பறித்து பார்த்தபோது, ஏராளமான ஆபாச படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நிறைய படங்களையும் அவர் அழித்துள்ளார். அதனை ரெக்கவரி எடுத்துபார்த்தபோது, மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆசிரியரை தனி அறையில் பூட்டிவிட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஏடிஎஸ்பி மணிமாறன் தலைமையிலான வந்த போலீசாரிடமும், பெற்றோர் வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்தினர். பின்னர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று, சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாரத்திற்குட்பட்ட முளுவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஹரிஹரன் என்பவர் அடிக்கடி பள்ளிக்கு போதையில் வருவதையடுத்து, கல்வி அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டனர்.

Related Articles

Latest Posts