அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
27.9 C
Tamil Nadu
Thursday, June 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

TN PLUS 2 Mathematics Exam 2023 | பிளஸ் 2 கணித தேர்வு கருணை மதிப்பெண் வழங்க முடியாது

TN PLUS 2 Mathematics Exam 2023 | பிளஸ் 2 கணித தேர்வு கருணை மதிப்பெண் வழங்க முடியாது

TN PLUS 2 Mathematics Exam 2023

பிளஸ் 2 கணிதத் தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என தேர்வுத்துறை மறுத்துவிட்டது.

தமிழ்நாடு பள்ளி கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கணித பாடத்தேர்வு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

வினாத்தாளில் மொத்தமுள்ள 90க்கு 19 மதிப்பெண்கள் பாடபுத்தகத்தக்கு வெளியே இருந்தும், சிந்தித்து பதிலளிக்கும் வகையில் நுண்ணறிவு கேள்விகளாகவும் இடம்பெற்றன. மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டன. இதையடுத்து விடைக்குறிப்பை எளிமையாக வடிவமைக்கவும், கருணை மதிப்பெண் வழங்கவும் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கணித வினாத்தாளில் இடம்பெற்ற தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை மறுத்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Read Also: 50 ஆயிரம் மாணவர்கள் ஏன் தேர்வு எழுதவில்லை

அரசு பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித வினாத்தாளில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற 47பி கேள்வி தவறாக உள்ளது. அதில் பொருத்தமற்ற வகையில் பரப்பு காண கேட்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நீள் வட்டத்துக்கும், கோட்டுக்கும் பொதுவாக அமையும் பரப்பினை காண்க என்பது கேள்வியாகும். அதேநேரம் நீள்வட்டத்துக்கு அடைபடும் பரப்பு உண்டு. ஆனால், ஒரு கோட்டுக்கு அடைபடும் பகுதி இல்லை என்பதால் அதற்கு பொது பரப்பு என்று ஒன்று இருக்கவே இயலாது. எனவே இவ்வினா தவறாகும். மாணவர்களால் கேள்வியை புரிந்துகொண்டு சரியான விடையை அளிக்க இயலாது.

அதனால் இதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வுத்துறை கவனத்து கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அதிகாரிகள் குழுவினர் மறுத்துவிட்டனர். அதன்படியே விடைக்குறிப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், மாணவர்கள் தேர்ச்சி பெருமளவில் சரியக் கூடும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, மாணவர்கள் நலன் காக்க முன்வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், என்றனர்

சோர்ஸ் மாலை முரசு  

Related Articles

Latest Posts