ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, டிட்டோ-ஜாக் தன் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற நான்கு நாட்டுகள் கெடு விதித்துள்ளது.
மத்திய அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17,18ம் தேதிகளில் போராட்டம் நடத்துவதாக டிட்டோ-ஜாக் அறிவித்திருந்தது. வரும் 22ல் தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டிட்டோ-ஜாக் நிர்வாகிகளுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கோரிக்கைகள் குறித்து, முதல்வரிடம் தெரிவிப்பதாகவும், முக்கிய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாகவும் உறுதி அளித்தார். தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேனியில் நடந்த டிட்டோ-ஜாக் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில், கோரிக்ககளை நிறைவேற்ற அமைச்சருக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்குள் உரிய அறிவிப்பை வெளியிடவிட்டால், போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.