You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவன்

Tirunelveli student’s mother diet student wrote exam

திருநெல்வேலியில் தாய் உயிரிழந்த நிலையிலும், பிளஸ் 2 மாணவன் தேர்வு எழுதச் சென்று விட்டு, பிறகு இறுதிச்சடங்களில் கலந்துகொண்ட நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். 

இந்த நிலையில், திருநெல்வேலியில் தாய் உயிரிழந்த சோகத்தையும் மறைத்துக் கொண்டு பிளஸ் 2 மாணவன் பொதுத்தேர்வை எழுதியுள்ளார். வள்ளயூரைச் சேர்ந்த மாணவன் சுனில்குமார் என்பவரின் தாயார் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை காலமானார். 

தேர்வுக்கு தயாராகி இருந்த சுனில் குமார், உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு, கண்ணீருடன் சென்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வை முடித்து விட்டு வந்து இறுதிச்சடங்கில் பங்கேற்று தாயுக்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது