Theekathir Marathon | அக்டோபர் 1ம் தேதி மாரத்தான் முதல் பரிசு ரூ 10,000
Theekathir Marathon
தீக்கதிர் நாளிதழ் சார்பில் திருப்பூர் மாரத்தான் நிகழ்வு வரும் அக்டோபர் 1ம் தேதி திருப்பூரில் நடக்க உள்ளது.
மாரத்தான் காலை 6 மணிக்கு ஓடக்காடு ஹவுசிங் யூனிட், காலேஜ் ரோடில் தொடங்க உள்ளது. பதிவுக் கட்டணம் ரூ 100 செலுத்த வேண்டும். முதலில் பதிவு செய்யும் 1,000 பேருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் பனியன், சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும். ஆண், பெண் இருபாலருக்கும் தனிதனியாக பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ 10,000, இரண்டாம் பரிசு ரூ 5,000, மூன்றாம் பரிசு ரூ 3,000, 5 ஊக்கப்பரிசுகள் ரூ 1,000 வழங்கப்படும்.
தொடர்புக்கு : 9944520397, 9003946766