அம்பத்தூர் பகுதியில் உள்ள தபால்துறையின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை விற்பனை செய்வதற்காக முகவர்களை தேர்ந்தெடுக்க நேர்முக தேர்வை நடத்த இருப்பதாக இந்திய போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு, தபால்துறையின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை விற்பனை செய்வதற்காக நேரடி முகவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு வரும் 25ம் தேதி அன்று காலை 11 மணி அளவில் அம்பத்தூர் தலைமை தபால் அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி அடைந்த 18வயதை பூர்த்தி அடைந்தவர்கள் அசல் சான்றிதழ்கள், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், பான் மற்றும் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ளலாம். இது அரசு சார்ந்த பணி அல்ல, முற்றிலும் கமிஷன் சார்ந்த பணி. விண்ணப்பதாரர்கள் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இருக்க கூடாது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.