You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Teacher job eligible in Tamil | ஆசிாியர் பணி தகுதி - நீதிமன்றம் உத்தரவு

Typing exam apply Tamil 2023

Teacher job eligible in Tamil | ஆசிாியர் பணி தகுதி - நீதிமன்றம் உத்தரவு

Teacher job eligible in Tamil

கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமனம் நடைமுறையை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்யுமாறு பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர் ஆங்கில பாடப்பிரிவிற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Read Also: ஆசிரியர் தகுதி தேர்வு தோ்ச்சிக்கு உண்மைதன்மை அவசியம்  

இந்த வழக்கு நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் , தமிழ் பாடப்பிரிவில் பி.எட் படிப்பை முடித்த பிறகு பிஏ ஆங்கிலம் படித்ததாலும் தொலைத்தூர கல்வி முறையின் கீழ் படித்ததாலும் மனுதாரர் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம்.

கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.

தொலைத்தூர கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல. இடஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவர்களையே ஆசிரிர்களாக நியமிக்க வேண்டும். தற்போது ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலோனோர் கல்லூரிகளுக்கு நேரில் சென்று படிக்காதவர்களாக இருப்பது துரதிஷ்டவசமானது.

அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27வது இடத்தில் உள்ளது. கல்விக்கு 36,895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியர்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது.

நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று, நேரில் ஆஜராக தொடக்க கல்வி இயக்குனர் அறிெவாளி தாக்கல் செய்த அறிக்கையில், கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஓப்புகொண்டுள்ளது.

எனவே, ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான திட்டத்தை மூன்று மாதங்களில் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை செயலாளர்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.