தமிழகத்தில் பள்ளி திறப்பு தேதி மாற்றம் என்று சமூக வலைதளங்களில் பரவி வருவதால், மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 2025-2026ஆம் கல்வி ஆண்டு அதாவது, பள்ளி திறப்பு ஜூன் 2ம் தேதி துவங்கும் என பள்ளி கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில், சில யுடியூப் சானல்களில் மழை, வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளி திறப்பு வரும் 9ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதனை செய்தி அட்டை போல் வடிவமைத்து வாட்ஸப் குழுக்களில் பரபரப்பட்டு வருகின்றனர். இந்த செய்தி உண்மை எனவும் பல பெற்றோர்கள் நம்பி வருகின்றனர். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, அவர்கள் பள்ளி திறப்பில் மாற்றம் என்பது திட்டமிட்ட பொய் செய்தி எனவும், மக்கள் இச்செய்தியினை நம்ப வேண்டாம் எனவும், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி ஜூன் 2ம் தேதி தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளி திறப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.