பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2025-26ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் (02.06.2025) அன்று பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, மேற்கண்டு நாளில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது. இவ் அறிவுரைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் உரிய செயல்பாடுகள் மேற்கொண்டிட தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகின்றது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.