Tamil Nadu Public Examination 2023 | பொதுத்தேர்வு 25.77 லட்சம் பேர் எழுதுகின்றனர்
Tamil Nadu Public Examination 2023
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023), பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளில் மொத்தம் 25.77 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு கல்விாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை கடந்த நவம்பா் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 14ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 5ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளன.
Read Also: TN 10th Supplementary Exam Question Paper PDF 2022
இதில் பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் அடுத்தமாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இறுதி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 9 லட்சத்து 38,067, பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 87,783 மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 51,482 மாணவர்கள் என மொத்தம் 25 லட்சத்து 77,332 பேர் எழுத உள்ளனர். இவற்றில் தமிழ் வழியில் 12 லட்சத்து 91,605 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.