அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Tamil Nadu Primary School Teachers Federation | உாிமை மீட்பு மாநாடு

Tamil Nadu Primary School Teachers Federation | உாிமை மீட்பு மாநாடு

Tamil Nadu Primary School Teachers Federation

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு மார்ச் 22ம் தேதி திருச்சியில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மாநில அலுவலகத்தில் 12.3.2023 நடந்தது. மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார்.

செயற்குழு கூட்ட முடிவு தொடர்பாக, மாநில பொதுச்செயலாளர் ச.மயில் பேசும்போது, பள்ளி கல்வித்துறையில் கீழ் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அதன் பள்ளி மாணவர்களுக்கும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என பாகுபாடு மேற்கோள் காட்டி, பல நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்குவதில்லை. இதனால், லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read Also: உடற்கல்வி ஆய்வாளர் மாற்றுப்பணி கைவிடுக

அதேபோல், மத்திய அரசு கடந்த 16 ஆண்டுகளாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வித்தொகையை எவ்வித காரணமின்றி நிறுத்தியுள்ளது. மாணவர்கள் பெற்றுவந்த உதவித்தொகையை இழந்துள்ளனர். இதனை வலியுறுத்தி அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு திருச்சியில் மார்ச் 22ம் தேதி நடத்தப்படும் என்று, பேசினார்.

மாநில அளவில் நடைபெறும் இக்கூட்டத்தில், கல்வியாளர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் தலைவர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

கூட்டத்தில், சென்னை மாநகராட்சி மாவட்ட செயலாளர் சத்தியநாதன், துணை பொதுச்செயலாளர் கணேசன் வரவேற்றார்.

Related Articles

Latest Posts