அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

கணவர் இறந்த நிலையில், தேர்தல் பயிற்சிக்கு வர வற்புறுத்தல், – ஆசிரியை வேதனை

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணி ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 3வது கட்ட பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. கடந்த 18ம் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இதுதொடர்பான தகவல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு சென்றடையவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (21ம் தேதி) 2வது கட்ட தேர்தல் பயிற்சி நடக்கிறது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க அழைப்பானை அனுப்பப்பட்டு உள்ளதுடன், முதற்கட்ட பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள், அதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே களக்காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையின் கணவர் கடந்த 16ம் தேதி திடீரென இறந்த நிலையில், ஆசிரியைக்கு 2வது கட்ட தேர்தல் பயிற்சிக்கு வருமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.

தனது நிலைைய விளக்கி தேர்தல் பணியில் பங்கேற்ற முடியாது என அவர் கடிதம் அனுப்பிய நிலையில், கல்வித்துறையினர் அதிகாரப்பூர்வமாக விடுப்பு தர மறுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள், கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தாக தெரிவித்தனர்.

Related Articles

Latest Posts