You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், கோரிக்கை வலுக்கிறது

|

தமிழகத்தில் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. கல்வித்துறை இவர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடக்கும் என தெரிவித்தது, அதன்படி வகுப்புகளும் நடந்து வருகிறது.

ெதாடர்ந்து ஆறு நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, மனச்சோர்வு போல் உணர ஆரம்பிக்கின்றனர். இதுதவிர, வீட்டு பாட சுமையாலும் அவதிப்படுகின்றனர். தொடர்ந்து 10 மாதம் விடுமுறை இருந்த மாணவர்கள், திடீரென ஆறு நாட்கள் பள்ளிக்கு வர வழைப்பது, அவர்கள் கல்வியில் விருப்பமின்மை ஏற்பட்டு, வெறுப்பு உணர்வு ஏற்பட ஆரம்பித்து விடுகிறது, என ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோன்று, பெரும்பாலான ஆசிரியர் சங்கத்தினரும் பள்ளிகள் ஐந்து நாட்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையாக பள்ளி கல்வித்துறைக்கு முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் சா.அருணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் 25 முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை 50% குறைத்து பள்ளிகள் திறக்கப்பட்டது பின்பு இந்த மாதம் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை குறைத்து அவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உத்தரவிட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அதிகமாக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் இடவசதி இல்லாதபட்சத்தில் சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைத்து பள்ளிகளை திறக்கவும் உத்தரவிட்டு செயல்படுகிறது.

வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும் என உத்தரவிட்டு தொடர்ந்து ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படுகிறது, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாணவர் முழு அளவில் பள்ளிக்கு வருகைத் தருகின்றனர். ஆனால் சனிக்கிழமைகளில் அதற்கு மாறாக 50% விழுக்காட்டிற்கும் குறைவாகவே பள்ளிக்கு மாணவர்கள் வருகை தருகின்றனர். 

இதன் காரணமாக, மாணவர்கள் அன்று நடக்கும் பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தும்போது வருகை தராத மாணவர்கள் பாதிக்கின்ற சூழல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவர்கள் பாதிக்காத வண்ணம் சனிக்கிழமைகளில் விடுமுறை அளித்து பள்ளி வேலைநாட்களை வாரம் ஐந்து நாட்களாக செயல்பட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுகொள்கிறது.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.