You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கொரோனா அதிகரிப்பு – 12ம் வகுப்புக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

கொரோனா அதிகரிப்பு – 12ம் வகுப்புக்கு  விடுமுறை அளிக்க வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கை, கொரோனா தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடங்கியிருந்த நிலையில், நேரிடை வகுப்புகள் கைகொடுக்கும் என்று வலியுறுத்தியதன் பேரில், கடந்த ஜனவரி மாதம் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது.

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் இந்த கல்வியாண்டில் தேர்ச்சி அளித்த பிறகு, மறு உத்தரவு வரும் வரை விடுமுறையளிக்கப்பட்டது.

தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருவது வேதனை அளிக்கிறது.

தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் 40 ஆயிரத்தையும் தாண்டி குறிப்பாக தமிழகத்தில் 1,385 பேர் கொரோனா பாதித்து 10 பேர் உயிாிழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் தமிழகத்தில் கொரோனா ஏறுமுகமாக உள்ளது என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இதனால் பொது தேர்வு என்பதால் 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளை தினந்தோறும் அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பிவைக்கிறோம் என பெற்றோர்கள் கவலையோடு தெரிவிக்கிறார்கள்.

எனவே பெற்றோர்களின் அச்சத்தை போக்கவும் மாணவர்கள் நலன் கருதியும்12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். இந்த கல்வியாண்டில் பொதுதேர்வினை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வுகள் நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும், இவ்வாறு, அதில் அவர் தெரிவித்துள்ளார்.