You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்கள், மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்கள், மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள், தேசிய தேர்வு வாரியம், தேசிய மருத்துவ ஆணையம் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021-2022 கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு பிப்ரவரி 23ம் தேதி மார்ச் 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும். ஏப்ரல் 18ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 235 தேர்வு மையங்களில் தமிழகத்தில் 28 மையம் மற்றும் புதுச்சேரியில் ஒரு மையமும் அமைக்கப்பட்டது.

விண்ணப்பங்கள் பெற துவங்கிய சில மணி நேரத்தில் தமழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பியதாக கூறி, இந்த மையங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களில் இருந்து நீக்கப்பட்டன. இதை எதிர்த்து, தமிழகத்தில் கூடுதல் மையங்கள் அமைக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் வீரபிள்ளை ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், தேர்வுக்கு விண்ணப்பிக்க 15ம் தேதி வரை அவகாசம் உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாக அறிவித்துள்ளதால், மாணவர்கள் வெளி மாநில தேர்வு மையங்களையே தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்கள் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போகிவிடும்.  அதனால், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார் குருப் அமர்வு மத்திய, மாநில, சுகாதார செயலாளர்களும், தேசிய தேர்வு வாரியமும் தேசிய மருத்துவ ஆணையமும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தது.