அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

ஆசிரியர்கள், மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு (COVID -19)

தமிழகத்தில் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், ஒரு சில இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

அந்த வகையில், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 4 ஆசிரியர் மற்றும் ஒரு மாணவிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சக ஆசிரியர்கள், மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, அந்த பள்ளியில் உள்ள 64 ஆசிரியர்கள், 60 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மேலும் 4 ஆசிரியர்கள் மற்றும் 1 மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகாித்து வருவது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Posts