அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

SNMV College | எஸ்என்எம்வி கல்லூரியில் டிஜிட்டல் ட்ரெண்ட்ஸ் கருத்தரங்கம்

SNMV College | எஸ்என்எம்வி கல்லூரியில் டிஜிட்டல் ட்ரெண்ட்ஸ் கருத்தரங்கம்

SNMV College

எஸ்என்எம்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிஅறிவியல் துறை சார்பில் “டிஜிட்டல் ட்ரெண்ட்ஸ்” எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் இன்று நடந்தது.

 இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் போ. சுப்பிரமணி தலைமை வகித்தார். கணினிஅறிவியல் துறைத் தலைவர் கே.தமிழ்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

Read Also: SNMV College Asteroid Search

Skyappz software நிறுவன மனிதவள மேம்பாட்டு  அதிகாரி பிரியங்கா மற்றும் நிறுவன மேலாளர்  கண்ணன் ஆகியோர் “டிஜிட்டல் ட்ரெண்ட்ஸ்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.

தனது சிறப்புரையில் “கரோனா காலகட்டத்தில் பல்வேறு துறைகளும் டிஜிட்டலை நோக்கி முழுமையாக நகர்ந்தாக வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின. அது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வீட்டிலிருந்து பணிபுரிதல், ஆன்லைன் கல்வி தொடங்கி சிறிய கடைகள் கூட ஆன்லைன் வர்த்தகத்தில் நுழைந்தது வரையில் இந்தக் கரோனா காலகட்டத்தில் டிஜிட்டலை நோக்கிய நகர்வு தீவிரமடைந்திருக்கிறது. இதனால், கணினிதுறை சார்ந்த மனிதவள மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. தற்போது, கிட்டத்தட்ட 400 சதவீதம் அளவில் கணினித்துறை ஊழியர்களுக்கு தேவை அதிகரித்து இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது புதிதாக கல்லூரி முடித்துவரும் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவ மாணவிகள் தங்கள் துறை சார்ந்த அறிவை தினம் தினம் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Related Articles

Latest Posts