ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகளில் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு மாதம் இறுதி வாரம் வெள்ளியன்று பள்ளி மோண்மை கூட்டம் நடத்தப்படுகிறது. அரையாண்டு தேர்வு நடைபெறுவதால், இந்த மாதம் பள்ளி மேலாண்மை கூட்டம் 23.12.2022 (வௌ்ளிகிழமை) அன்று பிற்பகல் 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்த அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடர்பாக, TNSED Parent App – ல் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் திட்டமிட வேண்டும் என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2022 வரை நடைபெறுவது குறித்து ெதரிவிக்க வேண்டும். மேலும், பள்ளி செல்லா மாணவா்கள் கண்டறிய பள்ளி மேலாண்மை குழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. PDF DOWNLOAD - CLICK HERE