கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வேலை நாட்கள் இன்று தொடங்கின. 32 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் சுமார் 40 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு திரும்புகின்றனர். பள்ளி திறக்கும் நாள் போகும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பட்ட நிைலயில், இன்று பள்ளி திறக்கப்பட்டது.
முதல்நாளான இன்றே, அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பாடபுத்தகங்கள், நோட்டு வழங்கப்பட உள்ளன. மேலும் பல பள்ளி தலைமை ஆசிரியர்கள் புதிய கல்வியாண்டான இன்று மாணவ, மாணவியர்களை வரவேற்க பல ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக, இனிப்பு பூ, மேலதாளத்துடன் வரவேற்பது, புத்தகம் அன்பளிப்பாக கொடுத்து வரவேற்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்துள்ளனர். முதல்நாளான இன்று மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தாமல், நூல்கள் வாசித்தல், கதைகள் கூறுதல், விளையாட்டில் ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.