பள்ளி சுற்றியுள்ள மாணவர்களை பள்ளியில் சேர்த்து, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
- ஆறு வயதிற்கு மேல் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, அவர்கள் வயதிற்கேற்ப அந்த பள்ளிகளில் சேர்க்க வேண்டும், சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பள்ளி அருகில் உள்ள பொதுமக்களுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
-
- READ ALSO: பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?
-
- கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழு ஏதேனும் நிதியினை பெற்றிருந்தால், அதற்காக தனியாக ஒரு வங்கி கணக்கை தொடங்கி நிர்வகிக்க வேண்டும். இந்த நிதி கணக்கினை ஆண்டு தணிக்கைகக்கு உட்படுத்தி, இதர விவரங்களோடு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
-
- இந்த சட்டத்தின்படி மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணம் வசூல் செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
School Management Committee Role in Tamil
School Management Committee Role in Tamil - மாற்றுதிறன் குழந்தைகளை கண்டறிந்து, அவர் கல்வி கற்க தேவையான வசதிகள், பள்ளியில் சேர்த்தல், வகுப்பறையில் பங்கேற்க செய்தல், தொடக்க கல்வியை நிறைவு செய்தல் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்தல்.
- ஆண்டு தோறும் பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல்.
- அரசு, உள்ளாட்சி அமைப்பு மற்றும் வேறு மூலங்களில் இருந்து கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்துவதற்கு உறுதுணையாக இருத்தல்.
- வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் RTE-2009 சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் தொடக்க வகுப்பில் 25 சதவீத இட ஓதுக்கீட்டின் கீழ் சேர்த்து இலவச கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளியின் செயல்பாடுகளை கண்காணித்து அவற்றுடன் இணைந்து பணியாற்றுதல்.
- மாணவர்களிடையே வளர்க்கப்படும் கற்றல் திறன்களை கவனித்து அதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்துதலில் பங்கு கொள்ளுதல்
- பள்ளியில் மதிய உணவு திட்டம் முறையாகச் செயல்படுவதை கண்காணித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல்.
- கிராம சபை கூட்டம் நடைபெறும் பொழுதெல்லாம் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் மற்றும் கல்வி சார்ந்த தீர்மானங்களை நிறைவேற உதவுதல்
- ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வரவு செலவு கணக்கு விவரங்களை நிதியாண்டு முடிந்த நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கையாக தயாரித்து, அதில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டு உள்ளூர் அதிகார மையத்திடம் ஒப்படைத்தல்.
- இலவச மற்றும் கட்டாய கல்வி பெறுவதை தடுத்தல், சேர்க்கை மறுத்தல், உடலளவில், மனதளவில் துன்புறுத்தல், பாகுபாடு போன்ற கல்வி உரிமை மீறல்கள் குறித்து சம்பவம் நடந்தால், இதுகுறித்து உள்ளூர் அதிகார மையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.
- சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளில் நடத்தப்படும் சுகாதார விழிப்புணர்வு செயல்பாடுகளில் பங்கு பெறுதல்.
- மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் குடற்புழு மாத்திரைகளில் வழங்கப்படுவதை கண்காணித்தல்.