தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது: 2009-10ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாட பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு பார்வை-3ல் காண் செயல்முறைகள் மூலம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2008-09ம் ஆண்டில் ஆசிரியர் தோ்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை என ஏற்கனவே செயல்முறைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2009-10 ஆண்டில் ஆசிரியர் தோ்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தனியே பணிவரன்முறை செய்ய வேண்டியதில்லை. மேலும், தற்காலிக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படும் நியமனங்களுக்கு நீதிமன்ற வழக்குகள் மற்றும் வேறு சில நிர்வாக காரணங்களுக்காக வழங்கப்படும் நியமனங்களுக்கு தனியே பணிவரன்முறை செய்யப்பட வேண்டும். இந்த செயல்முறைகளின் நகல்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், வட்டார கல்வி அலுவலர்களுக்கும், அனுப்பிவைப்பதோடு மட்டுமின்றி, உரிய பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இச்செயல்முறையினை, பெற்றமைக்கு ஒப்புதல் கொண்டமைக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.