மாணவிகள் முன்னிலையில், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணியாற்றும் முதன்மை அதிகாரி ஒரு முதுகலை ஆசிரியை பார்த்து நீங்கள் சகிலா மாதிரி இருக்கீங்க என வர்ணித்தது சேலம் மாவட்டத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் ஆசிரியையின் புகாரால், கல்வி அதிகாரிகள் அந்த அதிகாரியை கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வருகின்றனர்.
சேலம் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணியாற்றும் முதன்மை அதிகாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு, நங்கவள்ளி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு ஆய்வுக்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, முதுகலை ஆசிரியை ஒருவா், தனது பாடவேளையில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது இந்த அதிகாரி, என்ன பாடம் நடத்துகிறார் எனக்கேட்டுக்கொண்டே, மாணவிகள் முன்னிலையில், அந்த ஆசிரியை பார்த்து, நீங்கள் கேரள நடிகை சகிலா மாதிரி இருக்கீங்க என சபல புத்தியுடன் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், மேடம் என்னோட நம்பரை நோட் பன்னீக்கோங்க.. அப்புறம் கூப்புடுங்க என சொல்லிவிட்டு கிளம்பினராம். அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை, உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் இந்த அதிகாரி மீது புகார் கொடுத்துள்ளார். முதன்மை கல்வி அலுவலகம் புகார் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பறந்தது. அதன் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் நியமித்து, ஆசிரிையயின் புகார் மீது கடந்த இரண்டு நாட்களாக, அந்த முதன்மை அதிகாரி, ஆசிரியை, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகள் மீது தனிதனியாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அந்த அந்த அதிகாரி பெண் ஆசிரியைகள், அலுவலர்கள் (பிஆர்டிஇ) போன்களை புடுங்குவதும், அசட்டை வழிவதும் வாடிக்கையாக கொண்டுள்ளராம். மேலும், ஏற்கனவே புகார் அளித்தும், கல்வித்துறை கண்டும் காணமாலும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்போதும் கூட, மாவட்டத்தில் உள்ள மூத்த கல்வி அதிகாரிகள், இவரை இந்த விவகாரத்தில் காப்பாற்றுவதற்கான வேலைகளை பார்த்து வருவதாகவும், குறிப்பாக, பணியிட மாறுதல் வழங்கி, தப்பிக்க வைத்துவிடலாம் என யோசிப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றொல், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் அதிக கட்டிங் கொடுப்பதாகவும் இவர் மீது புகார் உள்ளது.