அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.8 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

அரசு பள்ளி ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டம் – கல்வி அலுவலகத்தில் பரபரப்பு

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, அரசு பள்ளி ஆசிரியர்கள் ராணிபேட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 100க்கும் மேற்பட்டோா் முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில், மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, அரசு ஊழியா்களுக்கு வழங்கியதுபோல், ஆசிரியர்களுக்கும் தாங்கள் பணியாற்றிய ஒன்றியம், மாவட்டத்திலேயே பணியாற்றுவதற்கு விரும்பினால், மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் செல்ல விருப்ப மற்றும் மனமொத்த மாறுதல் வழங்க வேண்டும்.

பிரிக்கப்பட்ட ஒன்றியங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு 1.1.2020 அன்றைய முன்னுரிமை பட்டியலின்படி பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதன்பிறகு பள்ளிகளை பிரித்து – பிரிக்கப்பட்ட ஒன்றியங்களுக்கு வழங்கிட வேண்டும்

புதிய ஒன்றியங்களில் இணைந்த அனைத்து வகை ஆசிரியா்களுக்கும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியத்தில் எந்த தேதியின் அடிப்படையில் (ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த நாள் / தகுதிகாண் பருவம் முடித்த நாள்) முன்னுரிமை வழங்கப்பட்டதோ அந்த தேதியினை அடிப்படையாக கொண்டு புதிய ஒன்றியங்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தினர். இதனால், பரபரப்பு நிலவியது.

போராட்டத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தின் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Articles

Latest Posts