பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று மதியம் வெளியாகிறது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் இன்று ஜூன் 23 மதியம் வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.இந்த பட்டியில்ல இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரம் பின்னா் அறிவிக்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.