சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் கடந்த 2013ம் ஆண்டு தனலட்சுமி என்பவர் இணை பேராசரியையாக பணியில் சேர்ந்தார். 2016 முதல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வந்தார். இதனிடையே, தனலட்சுமி பணியில் சேர்ந்தபோது அளித்த பணி அனுபவ சான்றிதழில் முரண்பாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பேராசிரியை தனலட்சுமி, நேர்காணலின்போது இணை பேராசிரியை பணிக்கான போதுமான அனுபவம் இல்லாத சான்றிதழ் சமர்ப்பித்திருப்பது தொியவந்தது.
அதேசமயம், பணியில் சேர்ந்த 8 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் இருப்பதாக மற்றொரு சான்றிதழை சமர்ப்பித்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, விசாரணையின் அறிக்கை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு வழங்கப்பட்டது. ஆய்வு செய்த அவர், தனலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.