விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி பிளஸ்2 பொதுத்தேர்வு மையமாக உள்ளது. இந்த மையத்தில் 624 பேர் பிளஸ்2 தேர்வு எழுதியிருந்தனர். இதில் 167 மாணவர்கள் வேதியியில் பாடத்தில் சென்டம் எடுத்தனர். வேதியியல் பாடம் பொறியியல் கட் ஆப்க்கு அந்த மதிப்பெண் மிகவும் முக்கியமானது.
அதில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 167 மாணவர்கள் தேர்ச்சியாகிருப்பதால் வினாத்தான் கசிந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த ஒரு மையத்தில் மட்டுமல்ல செஞ்சி ஒன்றியத்தில் பல மையங்களில் பல மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மேலும் பலர் 100க்கு 99 மதிப்பெண் எடுத்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் 90க்கு மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். இது கல்வித்துறையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியில் இல்லாத வகையில் செஞ்சி பகுதியில் மட்டும் மாணவர்கள் எப்படி சென்டம் எடுத்தார்கள் என்று விசாரணை நடந்தது. இதில் சென்டம் எடுத்த 167 மாணவர்களின் விடைத்தாள் மறுசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கை தேர்வுத்துறை இயக்குனரிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கையில், சென்டம் எடுத்த 167 மாணவர்களின் விடைத்தாள் சரிபார்க்கப்பட்டதாகவும், அதில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.