நீட் தேர்வு முறைகேடு வழக்கில், முக்கிய குற்றவரி ராக்கேஷ் ரஞ்சன் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் இதுவரை இல்லாத போல், 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் என பல முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது ஒருபக்க இருக்கவே, இந்த விவகாரம் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஜூலை 11 இன்று, முக்கிய குற்றவாளி ராக்கேஷ் ரஞ்சன் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, பீஹார், ஜார்க்கண்ட், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தி, பலரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.