மதுரை கே.கே நகரில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இங்கு ப்ரி கேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும், குழந்தைகள் பராமரிப்பு மையமும் செயல்படுகின்றன. 60 குழந்தைகளில், 20 குழந்தைகள் கோடை கால பயிற்சிக்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், யானைமலை ஒத்தக்கடையை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அமுதன்-சிவஆனந்தி ஆகியோரின் மகள் ஆருத்ரா படித்தார். ஏப்ரல் 29ம் தேதி பள்ளி வளாகத்தில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்த உயிரிழந்தார். பின்னர், அந்த பள்ளிக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர். மேலும் கல்வி அதிகாரிகள் விசாரணை அறிக்கை சென்னைக்கு அனுப்பி வைத்தநிலையில், இந்த நிலையில் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக தனியார் மழலையர் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து இன்று அப்பள்ளியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.