You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

அரசு ஊழியர் விபரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

tn governemnt employees latest news

தூத்துக்குடியைச் சேர்ந்த அமலா ஜெஸ்சி ஜாக்குலின், ஐகோர்ட் மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பதவி உயர்வு தொடர்பான அரசாணையில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே அந்த அரசாணையை ரத்துசெய்து தகுதியானவர்கள் பட்டியலுடன் பதவி உயர்வு அரசாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித் துறையில் உதவி பொறியாளராக 1998ம் ஆண்டு சேர்ந்த மனுதாரர், உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சட்டப்படி தண்டனை பெற்றவர்கள் அரசுப்பணியில் தொடர முடியாது. ஆனால் இப்போது வரை மனுதாரர் அரசுப் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எனவே, தமிழ்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் தண்டனை பெற்ற அரசு ஊழியர்கள் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் வஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனர ஆகியோர் ஒரு மாதத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.