You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

இந்த நான்கு மாவட்டங்களில் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை ஏன்?

Typing exam apply Tamil 2023

இந்த நான்கு மாவட்டங்களில் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை ஏன்?

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு ஜூலை 28ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது. முக்கிய வீரர்கள், பிரமுகர்கள் வருகையொட்டி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 28ம் தேதி அன்று ஒரு நாள் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை 28ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசு துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுகிறது. இந்த விடுமுறை ஈடு செய்யும் வகையில், 27.8.2022 நான்காவது சனிக்கிழமை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

அதேசமயம், கருவூலம், சார்நிலை கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.