அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

கடந்த ஓராண்டாக உலகில் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை – யுனிசெப் (UNICEF)

கொரோனா அச்சத்தால் உலகளவில் கடந்த ஓராண்டாக 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. அப்போது, முதலே பள்ளிகள் அடைக்கப்பட்டன. எனினும் பின்னர் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

தற்போது பல நாடுகள் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விலக்கி, பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்தாலும் முழு அளவில் கல்வி கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்கும் சூழல் உருவாகவில்லை.

இந்த நிலையில், பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிைகயை ஐ.நா அமைப்பான யுனிசெப் ஆய்வு செய்தது. இதுதொடர்பாக யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் 16.8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கடந்த ஓராண்டாக பள்ளி செல்லவில்லை. 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்பில் பங்கேற்கவில்லை.

மேலும் முழு மற்றும் பாதியளவு கல்வி பள்ளிகள் மூடலால் 88.8 குழுந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 14 நாடுகளில் கடந்தாண்டு மார்ச் முதல் கடந்த மாதம் வரை பெரும்பாலான பள்ளிகள் மூடியே உள்ளன. இதனால், 9.8 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அறிக்கை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Posts