அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பள்ளி மாணவரகள் இடையே பயங்கர மோதல்

திருப்பூரில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு நடுரோட்டில் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகிறது.

நேற்று மாலை 4.30 மணிக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி எதிரே உள்ள ரோட்டில் திடீரென இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் கையால் தாக்கிகொண்டனர்.

அங்கே இருந்த கடை உரிமையாளர்கள் அவர்களை விலக்கி விடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் மாணவர்கள் விரட்டி விரட்டி தாக்கிகொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதவிர போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த ஆசிரியர்கள் அங்குவந்து அவர்களை விரட்டினர். இச்சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர்கள் இருபிரிவுகளாக இருப்பதும், அடிக்கடி மோதலில் ஈடுபடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை தவிர போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Articles

Latest Posts