அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Kalai Thiruvizha – கலை திருவிழா போட்டி கோவை முதலிடம்

Kalai Thiruvizha – கலை திருவிழா போட்டி கோவை முதலிடம்

Kalai Thiruvizha

பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா 2022-2023 மாநில அளவிலான வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் இன்று நடந்தது.

இதில் புள்ளிகள் அடிப்படையில் கோவை மாவட்டம் முதலிடமும், சேலம் மாவட்டம் இரண்டாவது இடமும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மூன்றாவது இடமும் பெற்றது. அதிக மாணவர்கள் பற்கேற்ற மாணவர்கள் என்பதற்காக, வேலூர் மாவட்டத்திற்கு சிறப்பு பரிசு அளிக்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இந்த நிகழ்வில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யமொழி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

Read Also: திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் பிடிவாரண்ட்

பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் பேசியதாவது, கிராமப்புற மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், இந்த கலைத்திருவிழா பல மாணவர்களின் திறமையை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கலைதிறனை ஊக்கும் வகையில் கலை திருவிழா நடத்தப்பட்டது, சுமார் 28.50 லட்சம் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்று கலைத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த கலைத்திருவிழாவை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாடுகின்றனர். கற்றல், கற்பித்தலுடன் கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறுவார்கள், அதுபோல் இந்த கலை திருவிழா அமைந்துள்ளது. சுமார் 1750 மாணவர்கள் மாநில அளவிலான கலைத்திருவிழாவில் வெற்றிபெற்று, பாிசு பெறுகின்றனர். அரசு பள்ளி வறுமையின் அடையாளாம் அல்ல, பெருமையின் அடையாளம். கலை வாழ்கை மூலம் பொதுவாழ்விற்கு வந்தவர் கலைஞர், அவர் வழியே முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளனர். அவர்கள் தலைமையில் கல்வித்துறை அடுத்தகட்டத்திற்கு எடுத்துசெல்வது நமது தலையாக கடமை. இவ்வாறு அவர் பேசினார்

முலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, இங்கு வெற்றிபெற்றவர், சாதாரண வெற்றியை பெறவில்லை, லட்சகணக்கான மாணவர்களிடம் போட்டி போட்டு வென்று இங்கு வந்துள்ளனர். அதற்கு காரணம், அவர்களது துணிச்சல், தன்னம்பிக்கை, அறிவாற்றால். இதை பயன்படுத்தி தங்களது திறமைமைய மேலும் மேம்படுத்த கொள்ள வேண்டும்.

பள்ளி பாடபுத்தகங்கள் தவிர பள்ளி கல்வித்துறை கலைத்திறனையும், அறிவுத்திறனையும் மாணவர்கள் மத்தியில் ஊக்குவித்து வருகிறது. 13,210 பள்ளிகளில், 28,53,882 மாணவர்கள் கலை போட்டியில் பங்கேற்று திறைமையை வௌிப்படுத்தினர். கல்வித்துறைக்கு பாராட்டுக்கள். கலைத்திறன் மூலம் மாணவர்கள் சிந்தனை திறன் அதிகரிக்கும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மை குழு கட்டமைத்தல், எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்பாட பிரிவுகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, கல்வி கட்டணம் செலுத்துல் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது.

புதுமைபெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் படிக்கும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது, நவீன ஆய்வகங்கள், ஸ்மாாட் வகுப்பறை அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இடையே கணிதம், அறிவியல் சார்ந்த சிந்தனைைய ஊக்குவிக்க வானவில் மன்றம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலையை தங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், கலை அறிவு, பகுத்தறிவு இச்சமுாயத்திற்கு மாணவர்கள் விதைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

Related Articles

Latest Posts