You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

அரசு உதவிபெறும் மாணவர்களுக்கும் மருத்துவ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்துல்

அரசு உதவிபெறும் மாணவர்களுக்கும் மருத்துவ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்துல்

திண்டுக்கலில் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், அதன் மாநில தலைவர் ராமு பேசுகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதமாக இருக்கும் உள் இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும், மீதமுள்ள 2.5 சதவீதத்தை அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திருத்தப்பட்ட பணிமூப்பு பட்டியலையும் விரைவில் அரசு வெளியிட வேண்டும், ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை இணையதளம் வழியாக நடத்த வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அரசு பள்ளிகளை போல, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் செய்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் பள்ளி கல்வித்துறையில் கீழ் செயல்படும் கல்வி தொலைக்காட்சியில் வள்ளுவருக்கு காவி உடை தரித்து நிகழ்ச்சி ஒளிப்பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேசிய திறனாய்வு தேர்வில் கோவை மாவட்டத்தில் 6,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு கோவை மாவட்டத்தில் 72 மையங்களில் நடந்துள்ளது.

வேளாங்கண்ணி மாவட்டம் வடுகச்சேரி மெயின் ரோட்டை சேர்ந்த 7வது வகுப்பு மாணவன் ஜாசிம் குளத்தில் மீன் பிடிக்க சென்றபோது, குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயரை 48 விநாடிகளில் கூறி அப்பகுதியில் கலக்கி வருகிறார். இதுதவிர, இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரம், இந்தியாவின் 7 தேசிய சின்னம், தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை, ஆங்கில மாதங்களை என அனைத்து மின்னல் வேகத்தில் கூறி அசத்தி வருகிறார். மாணவன் தாய் தனலட்சுமி கூறியபோது, ஊரடங்கின்போது, ஆசிரியையாக மாறி அனைத்து அவனுக்கு சொல்லி கொடுத்தேன். மாணவனின் இந்த அசத்தல் பதிலால், அப்பகுதியினர் மாணவனை பாராட்டி வருகின்றனர்.

திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மானியம் விடுவித்தல் சார்பாக அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விளக்க கூட்டம் நடந்தது.

Read, Comment, and Share. To receive education information promptly subscribe to www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/ ShareChat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.