HM faces promotion issues | 1040 தலைமை ஆசிரியர்கள் பணியிறக்கம் செய்ய நடவடிக்கை
HM faces promotion issues
தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் என 3 வகையான நிலைகளில் ஆசியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் என 2 வகையான பதவி உயர்வுகள் வழங்கப்படும். அவ்வாறு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றால், அடுத்த பதவி உயர்வை பெற சில ஆண்டுகள் தாமதமாகும். இதை தவிர்க்க ஆசிரியர்கள் தங்களின் பட்டதாரி ஆசிரியர் பணிமூப்பு அடிப்படையில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர்.
இந்த முறைைய ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள்ச சிலர் வழக்கு தொடர்ந்தனர். அதில் 2016 ஜனவரி 1ம் தேதிக்கு பின், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களின் நியமனம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சுமாா் 1040 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களாக பழைய நிலைக்கு பணியிறக்கம் செய்யப்பட உள்ளனர். அவர்களில் கணிசமானவர்களை வட்டார வள மைய கண்காணிப்பாளர்களாக நியமிப்பதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான விவரங்கள் சேகரிப்பில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.