You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

போதை ஆசாமியால் அரசு பள்ளி ஆசிரியை பலி

Ayothiyapattinam government school news

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் பெல்சிட்டாள் (53). இவர் ராமநாதபுரம் சாயல்குடி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கோடை விடுமுறையால், ெசாந்த ஊர் திரும்பிய பெல்சிட்டாள், நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் கச்சேரிநடை பகுதியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார், பெல்சிட்டாள் இருசக்கர வாகனம் மோதியது. இதில் அவர் கால் துண்டிக்கப்பட்டு ரோட்டில் விழுந்தது. மேலும் கோர விபத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு பேராடினார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும்போது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுதொடர்பாக விபத்து ஏற்படுத்திய மிளகுநின்றவிளை பகுதியை சேர்ந்த அஜின் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் குடிபோதையில் காரை இயக்கியது தெரியவந்தது.